இந்த நிறுவனத்தில் டோனிக்கு 15 சதவீத பங்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த நிறுவனத்தின் உரிமையாளரான அருண் பாண்டே, டோனியின் குடும்பத்திற்கு நெருங்கிய நபர் ஆவார்.
இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைக்கு முரண்பட்ட செயலாகும். அதனால் டோனி இரட்டை ஆதாயம் பெறும் வகையில் ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் அங்கம் வகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை டோனியிடம் விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment