Wednesday, August 6, 2014
நடிகர் தனுஷ் கைது செய்யப்பட்டதாக வதந்தி. சென்னையில் பெரும் பரபரப்பு……!
இன்று காலை முதல் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மருமகனுமாகிய தனுஷ் கைது செய்யப்பட்டார் என்ற பரபரப்புதான் அது.
சமீபத்தில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி குறித்து அவதூறாக வசனம் பேசிய தனுஷ், இந்த படத்தை இயக்கிய வேல்ராஜ் ஆகியோர்களுக்கு அந்த பள்ளியின் நிர்வாகம் கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்கும்படி படக்குழுவினர்களை பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால் தியேட்டர்களில் இன்னும் அந்த வசனம் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. எனவே ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாகிகளின் புகாரை ஒட்டி தனுஷ் கைது செய்யப்பட்டதாக ஒரு சில இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், தனியார் எப்.எம். வானொலிகளிலும் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் இந்த வதந்திக்கு தனுஷ் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் மேனேஜர் இதுகுறித்து கூறுமையில் தனுஷ் மீதி எவ்வித சட்ட நடவடிக்கை புகாரும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்றும், அவர் கைது செய்யப்படவில்லை என்றும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த புகாரையும் எழுத்து மூலம் வழங்கவில்லை என்றும் காவல்துறையின் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்கையில் இந்த வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை என்று கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment