தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நிதான ஆட்டம்.
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. கொழும்பு S.S.C மைதானத்தில் இடம்பெற்றும் வரும் இப் போட்டியில் இரண்டாவது நாள் மதிய நேர இடைவேளை வரை இலங்கை அணி 395 ஓட்டங்களை 6 விக்கட் இழப்பிற்கு பெற்றுள்ளது. இதில் மஹேல ஜெயவர்தன 165 ஓட்டங்களை பெற்று கொடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அறிமுக போட்டியில் களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல கன்னி அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார்.


No comments:
Post a Comment